தமிழகத்திற்கு ஏப்., 30, மே 1ம் தேதிகளில் ரெட் அலர்ட் : இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

டெல்லி : புயல் உருவாகும் சூழலில் தமிழகத்திற்கு ஏப்., 30, மே 1ம் தேதிகளில் இந்திய வானிலை மையம் ரெட் அலட்ர் கொடுத்துள்ளது. இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புகலாக மாறும் என ஏற்கனவே வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த புயலுக்கு ஃபனி என பெயரிடப்பட்டுள்ளது.

இது மேற்கு-வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் புயலானது தமிழகத்தில் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. அப்போது சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதிக கனமழை பெய்யும் என்றும் தகவல் அளித்துள்ளனர். இதனால் தமிழகத்திற்கு ஏப்., 30ம் தேதி, மே 1ம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம். புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஏப்.30, மே 1ல் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் பாலசந்திரன், சென்னைக்கு 1500 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏப்ரல் 27, 28ம் தேதி புயலாக மாறும் என கூறியுள்ளார். அவ்வாறு உருவானால் வடதமிழகம் நோக்கி வர வாய்ப்புள்ளதால் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் புயலாக மாறும் என்பதால் கனமழை பெய்யும் என்று கூறியுள்ளார். மேலும் மீனவர்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், மிக கனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்றும் பாலசந்திரன் தகவல் அளித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: