தங்கம் பதக்கம் வெல்வதே என்னுடைய வாழ்நாள் கனவு என்றும் தற்போது கனவு நிறைவேறியது என்று ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து கூறியுள்ளார். 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. பதக்கம்வென்றதால் என்னுடைய சிறிய ஊர் முடிகண்டம் தற்போது வெளியே தெரிவது பெருமையாக உள்ளது என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தங்கப்பதக்கம் பெறும்போது தேசிய கீதம் இசைக்கையில் எனக்கு முகவும் சந்தோஷமாக இருந்தது என்று அவர் கூறியுள்ளார். பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான தமிழக வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் 800 மீட்டர் தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.