சீனா: ஹாங் காங்கில் 2014ம் ஆண்டு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுத்த முக்கிய தலைவர்கள் 4 பேருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டதை கண்டித்து பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. சீனாவின் ஆதிக்கம் நிறைந்த ஹாங்காங்கில் சுதந்திரமான தேர்தல் நடத்தப்பட்டு தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பது ஒத்துழையாமை இயக்கத்தினரின் கோரிக்கை ஆகும். இதனை வலியுறுத்தி 2014ம் ஆண்டு அம்ரெல்லா இயக்கம் என்ற பெயரில் பெரும் போராட்டங்களை முன்னெடுத்த சென் கின் மேன், லீ விங் டாட் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் 4 பேருக்கு ஹாங்காங் உயர்நீதிமன்றம் ஒன்றரை ஆண்டு கால சிறை தணடனையை விதித்தது. ஜனநாயக போராட்ட ஆதரவு தலைவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு, அவர்களது ஆதரவாளர்கள் மத்தியில் கொளந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாங் காங்கின் பல இடங்களில் இளைஞர்கள், மாணவர்கள் பதாதைகளை மாற்று மெழுகுவர்த்திகளை ஏந்தி கணடன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.