இலங்கையில் நீதிமன்ற வளாகத்தில் மீண்டும் குண்டு வெடிப்பு: மக்கள் அதிர்ச்சி

கொழும்பு: கொழும்புவின் கம்பஹாவில் உள்ள பூகொட நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் பிரார்த்தனை நடந்த 3 தேவாலயங்கள், 3 ஓட்டல்கள் உட்பட 8 இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில், 45 குழந்தைகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இலங்கையில் ஒரு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஏனெனில் அங்கங்கே வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து இலங்கை முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உலகையே உலுக்கிய இக்கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு தாக்குதலுக்கு உதவியவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் இலங்கை பாதுகாப்பு படையினரும், சிஐடி மற்றும் போலீசாரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த தாக்குதல் தொடர்பாக 60 பேரை கைது செய்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் இலங்கையில் 8 இடங்களில் தொடர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய ஐஎஸ் தீவிரவாதிகள் 7 பேரின் பெயர் வெளியிடப்பட்டது. அபு உபெய்தா, அபு அல் முக்தார், அபு கலீல், அபு ஹம்ஸா, அபு முஹம்மத், அபு அல் பாரா, அபு அப்துல்லா ஆகியோர் தாக்குதல் நடத்தினர் என்று இலங்கை அரசு கூறியுள்ளது.

இந்நிலையில் தபோது சில நிமிடங்களுக்கு முன்னதாக கொழும்புவில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய பூகொட என்ற இடத்தில்  நீதிமன்றம் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனை தொடர்நது காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் யாருக்கும் காயம் இல்லை என இலங்கை போலீசார் முதற்கட்ட தகவலை தகவல் தெரிவித்துள்ளனர். இருப்பினும் பலத்த சத்தத்துடன் வெடித்த வெடிகுண்டால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: