டோக்கியோ: ஜப்பானில் புகைப்பிடிப்பவர்கள் பேராசிரியராக முடியாது என்று ஜப்பான் பல்கலைக்கழக நிர்வாகம் புதிய சட்டம் விதித்துள்ளது. ஜப்பானில் 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதனல் அங்கு புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ஜப்பானில் பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவமனை வளாகங்களில் புகைப்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் செய்தி தொடர்பாளர் யூசுகே தாகுகுரா கூறியதாவது: புகைப்பிடிக்கும் பழக்கமுடையவர்கள் கல்வித்துறைக்கு பொருத்தமானவர்கள் இல்லை. நாகசாகி பல்கலைக்கழகத்தை புகைப்பிடிப்பவர்கள் இல்லாத பல்கலைக்கழகமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது.