இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்த 5 பேரின் உடல் அடக்கம்

பெங்களூரு: இலங்கை  தலைநகர் கொழும்புவில்நடந்த வெடிகுண்டு தாக்குதலில் கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த ரஜீனா, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்ததாக இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

உயிரிழந்தவர்களில் லட்சுமி நாராயணா, ரங்கப்பா, நாகராஜ்ரெட்டி, அனுமந்தராயப்பா மற்றும் சிவண்ணா ஆகிய 5 பேரின் உடல்கள் நேற்று காலை பிரேத பரிசோதனை செய்தபின் விமானம் மூலம் பெங்களூரு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து அவரவர் வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: