திடீர் நெஞ்சுவலி திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் மருத்துமனையில் அனுமதி

சென்னை: திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திமுக தலைமை நிலைய செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவுமான கு.க.செல்வம் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாக செயலாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென நெஞ்சுவலி வந்தது.

உடனடியாக அவரை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறினர். டாக்டர்கள் ஆலோசனையின் படி ஓரிரு நாளில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரை திமுக மூத்த தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: