மாநில கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு மே 6 வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

சென்னை: சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு மே 6ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் கடந்த 19ம் தேதி வெளியானது. அதைத்தொடர்ந்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை பெற மாணவர்கள், பெற்றோர் அலைமோதுகின்றனர். இந்நிலையில் சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு மே 6ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாநிலக்கல்லூரி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் விண்ணப்பித்தவர்கள் மதிப்பெண், சமூகப்பிரிவு அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு மாணவர் சேர்க்கைக்காக அழைக்கப்படுவார்கள். அப்போது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியுள்ள மாணவர்களுக்கு அட்மிஷன் வழங்கப்பட உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: