மத்தியில் மூன்றாவது கூட்டணிக்கு மீண்டும் சந்திரசேகர ராவ் முயற்சி

மத்தியில் பாஜ, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது கூட்டணியை அமைக்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மீண்டும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.  மத்தியில் ஆளும் பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அல்லாத கூட்டணியை அமைக்க மக்களவை தேர்தலுக்கு முன் தெலங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் தீவிர முயற்சி மேற்கொண்டார். இதற்காக அவர் பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் மக்களவை தேர்தலின் 3 கட்ட வாக்குப்பதிவுடன் தென்மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் மீண்டும் இது தொடர்பான பேச்சை தொடங்க முதல்வர் சந்திரசேகர ராவ் நடவடிக்கை எடுத்து வருவதாக தெலங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘‘இம்முறை மாநில கட்சிகளின் வெற்றி கணிசமாக இருக்கும். இதனால் மத்தியில் மூன்றாவது கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உள்ளது. இதை சந்திரசேகர ராவ் சரியாக பயன்படுத்த நினைக்கிறார்’’ என்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: