ஊட்டி: ஊட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நீலகிரி மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இங்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இங்கு 220 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஒரு சிறுத்தை உலா வந்துள்ளது. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் இரவு நேரங்களில் பாதுகாப்பாக இருக்க தேர்தல் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.