38 கிரானைட் வழக்குகள் ஒத்திவைப்பு

மேலூர்: மேலூர் பகுதியில் கிரானைட் கற்களை அரசுடமையாக்க கோரி மதுரை கலெக்டர் தொடர்ந்த வழக்குகளில் பிஆர்பி கிரானைட் நிறுவனம் உட்பட தனி நபர்கள் மீதான 26 வழக்குகள் முதலில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் தொடுத்த பிஆர்பி கிரானைட் நிறுவனம் உட்பட மேலும் சில நிறுவனங்கள் மீதான 12 வழக்குகள் விசாரணைக்கு வந்தது. மொத்தம் உள்ள 38 வழக்குகளையும் ஏழாக பிரித்து மே மற்றும் ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைத்து  மாஜிஸ்திரேட் பழனிவேல் உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: