×

மும்பையில் கொலை செய்து விட்டு சேலத்தில் பதுங்கிய 3 பேர் சிக்கினர்

போச்சம்பள்ளி: மும்பையில் நடந்த ஒரு கொலை வழக்கில் தலைமறைவாகி, சேலத்தில் நண்பர் வீட்டில் பதுங்கிய 3 பேரை, மும்பை தனிப்படை போலீசார் நேற்று சுற்றிவளைத்து கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், கடந்த வாரம் ஒரு கொலை நடந்துள்ளது. அந்த  கொலையில் தொடர்புடைய 3 பேர், அங்கிருந்து தமிழகத்திற்கு தப்பி வந்துள்ளனர். இதை அறிந்த மும்பை தனிப்படை போலீசார் நேற்று போச்சம்பள்ளி அருகில் உள்ள பட்டகப்பட்டி கிராமத்திற்கு சென்றனர். போச்சம்பள்ளி போலீசார் உதவியுடன், குற்றவாளிகள் பதுங்கியுள்ள இடத்தை அறிந்துகொண்டனர்.

பின்னர் உள்ளூர் போலீசாருடன், குற்றவாளிகள் பதுங்கிய நண்பர் மணி என்பவரின் வீட்டை சுற்றி வளைத்தனர். அங்கிருந்த 3 பேரை கைது செய்து, போச்சம்பள்ளி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர்கள் கர்நாடகாவை  சேர்ந்த அனில்குமார்(27), சந்திரகவுடா(30), கிரண்குமார்(28) என்பது தெரிய வந்தது. மேலும், 3 பேருக்கும், பட்டகப்பட்டியை சேர்ந்த மணி, கர்நாடகாவில் கூலிவேலை செய்யும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த பழக்கத்தை வைத்து, மணியின் வீட்டில் தங்கியுள்ளனர். இதன்பின் 3 பேரையும், மும்பைக்கு அழைத்துச்சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mumbai ,Salem , Mumbai, murder, salem, sunken, 3 people, trapped
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...