சென்னை: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற ஜூன் மாதம் நடக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவும், இரண்டு முறை செயற்குழுவும் கூட்ட வேண்டும் என்பது அதிமுகவின் சட்ட விதிகளில் ஒன்று. கடைசியாக 2017ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சசிகலா பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர். அதன்பிறகு கடந்த ஒன்றரை ஆண்டாக அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவில்லை.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக தரப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.