சென்னை: தமிழகத்தில் 2019-2020ம் ஆண்டு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான புதிய அரசாணை மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இதன் மூலம் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் அதிகாரம் குறைப்பு செய்யப்பட்டு, புதிய அரசாணை வெளியானது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கான பணிகளை தொடங்க வேண்டிய நிலையில், எப்ரல் மாதம் தொடங்கிய பின்னரும் இன்ஜினியரிங் கவுன்சலிங்கை நடத்தப்போவது யார் என்ற கேள்வி தொடர்ந்தது. இந்நிலையில் உயர்கல்வித்துறை செயலாளர் தொழில்நுட்ப கல்வி இயக்ககமே இன்ஜினியரிங் கவுன்சலிங்கை நடத்தும் என்று கூறியிருந்தார்.