சென்னை: பூஜ்ஜிய நிழல் நாளை முன்னிட்டு நிழல் இல்லாத நாளை, சென்னையில் நேற்று பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு இடத்துக்கு இரு முறை பூஜ்ஜிய நிழல் நாள் வருகிறது. சூரியன், பூமியின் அந்த பகுதி நேர்கோட்டில் அமைவதால் ஏற்படும் நிகழ்வு இது. பூமி சுழற்சி காரணமாக கல்பாக்கம், மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் ஏப். 23ம் தேதி பூஜ்ஜிய நிழல் நாள் வந்தது. சென்னையில் இந்த ஆண்டு பூஜ்ய நிழல் நாள் ஏப். 24, ஆக.18ம் தேதிகளில் வருகிறது. அப்போது பூஜ்ய நிழல் நேரத்தில் நம்முடைய நிழல் நேராக நம்முடைய கால்கள் உள் பகுதியிலயே விழும். நம்முடைய நிழல் நம் உடலைவிட்டு வெளியே செல்லாது.