ஐபிஎல் 2019; Mr 360 அதிரடி; பஞ்சாப்க்கு 203 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி

பெங்களூரு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 203 ரன்களை வெற்றி இலக்காக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.

அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, இதுவரை 10 போட்டிகளில் ஆடி, அவற்றில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் ஆடியுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி அவற்றில் 3 போட்டிகளில்  மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 6 புள்ளிகளுடன் பெங்களூரு அணி, பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற பெங்களூரு அணி, இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வென்றே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: