பாளையன்கோட்டை ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி

செம்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், பாளையன்கோட்டை ஊராட்சியில் உள்ளது இந்திரா காலனி. இப்பகுதிமக்களுக்கு சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் தனியார் தண்ணீர் லாரிகளில் குடம் ஒன்றுக்கு ரூ.5 விலை ெகாடுத்து வாங்குகின்றனர். ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், அப்பகுதி வழியாக செல்லும் குடிநீர் பைப் லைனில் கசியும் சுகாதாரமற்ற நீரை பாத்திரங்களில் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. ஏதேனும் விபரீதம் நிகழும் முன்பு, இப்பகுதியில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து கொடுத்து தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திற்கு இப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: