கேரள நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு போட்ட 107 வயது மூதாட்டி: அனைத்து தேர்தலிலும் ‘பிரசென்ட்’

மூணாறு: கேரள நாடாளுமன்ற தேர்தலில் நேற்று 107 வயது மூதாட்டி ஓட்டளித்தார். இவர் இதுவரை நடந்துள்ள 17 மக்களவை தேர்தலிலும் ஓட்டளித்தது குறிப்பிடத்தக்கது. கேரள மாநிலத்தில் நேற்று 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இடுக்கி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட மூணாறு அருகே பெரியவாரை எஸ்டேட் லோயர் டிவிஷனை சேர்ந்தவர் பாலம்மாள். 107 வயதான இவர் பெரியவாரை வாக்குச்சாவடி எண் 45ல் நேற்று தனது வாக்கை பதிவு செய்தார். மகன் மற்றும் மருமகள் அவரை அழைத்து வந்தனர்.

இதுகுறித்து பாலம்மாள் கூறுகையில், ‘‘இதுவரை நடந்துள்ள 17 மக்களவை தேர்தலிலும் நான் ஓட்டு அளித்துள்ளேன். எந்த தேர்தலிலும் ஓட்டுபோடாமல் இருந்ததில்லை’’ என்று பெருமையுடன் தெரிவித்தார். 107 வயதில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மூதாட்டியை அனைவரும் பாராட்டினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: