ராஞ்சி: தேர்தல் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காரணமாக கூற எதிர்க்கட்சிகள் தயாராகி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் லோகர்தாகா பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மோடி கூறியதாவது: எதிர்க்கட்சிகள் இதுவரை என்னை அவதூறாக பேசி வந்தன. ஆனால் நேற்று முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது குற்றம் சுமத்த துவங்கி உள்ளனர்.
தேர்தல் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது குற்றம் சுமத்த முடிவு செய்துள்ளனர். பள்ளி மாணவர்கள் தேர்வு சரியாக எழுதாவிட்டால், வீட்டிற்கு வந்து பேனா சரியாக இல்லை என காரணம் கூறுவது போல் தான் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை உள்ளது. இலங்கையில் சமீபத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை போல் தான் 2014 ம் ஆண்டிற்கு முன்பு வரை இந்தியாவிலும் நடந்தேறின வந்தன. இவ்வாறு மோடி கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி