கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் மேலும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்புவின் வெள்ளவத்தை பகுதியில் உள்ள சவாரி திரையரங்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இலங்கையில் கடந்த ஞாயிறன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இதுவரை 45 சிறுவர்கள் உட்பட 359 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பயங்கரவாதிகள் நடத்திய இந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து இலங்கையில் நேற்று முன்தினம் இரவு அவசர நிலை பிரகடனம் செய்து அதிபர் சிறிசேன உத்தரவிட்டார்.