திருமலை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில், சர்வதேச நிபுணர் குழு முன் விளக்கம் தர தயார் என்று திருப்பதியில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரதாப் ரெட்டி கூறினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரதாப் ரெட்டி நேற்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கினர். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உலக மக்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும். நாளுக்கு நாள் வியாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 15 வயதில் கூட மாரடைப்பு, கேன்சர் போன்றவை ஏற்படுகிறது. இதுகுறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திய காரணத்தால் எனது கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளில் புற்றுநோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது.