திருப்பதியில் 27ம் தேதி நான்கரை மணி நேரம் தரிசனம் நிறுத்தம்

திருமலை: திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு நேற்று அளித்த பேட்டி: திருமலையில் உள்ள வராக சுவாமி கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பூஜைகள் இன்று (நேற்று) தொடங்கியுள்ளது. வருகிறது 27ம் தேதி காலை 11 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி ஏழுமலையான் கோயிலில் 27ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்படும். அதன் பிறகு வழக்கம்போல் பக்தர்கள்  அனுமதிக்கப்படுவார்கள். மேலும், கோடைகால விடுமுறையை கருத்தில்கொண்டு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள், மிக முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் விஐபி தரிசனம் வழங்கப்படும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: