சென்னை: தாய் மொழி கண் போன்றது; ஆங்கிலம், இந்தி கண்ணாடி போன்றது. எனவே தமிழ் ெமாழிக்க அனைவரும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேசினார். சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நேற்று 9-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் மாணவர்களிடையே பேசியதாவது: தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள். தாய்மொழி என்பது கண் போன்றது. ஆங்கிலம், இந்தி மற்ற மொழிகளில் எல்லாம் கண் கண்ணாடி போன்றது. கண் சரியாக இருந்தால் மட்டுமே பிற மொழிகள் மூலம் பேச முடியும்.