4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மண்பாண்ட தொழிலாளர்கள் திமுகவுக்கு ஆதரவு: மாநில தலைவர் சேம.நாராயணன் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் மண்பாண்ட தொழிலாளர்கள் திமுகவுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று மாநில தலைவர் சேம.நாராயணன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்க தலைவரும், முன்னாள்  வாரிய தலைவருமான சேம.நாராயணன் நேற்று விடுத்துள்ள அறிக்கை: தமிழகத்தில் வருகிற மே 19ம் தேதி நடைபெறவுள்ள அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.கவிற்கு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்கம் முழு ஆதரவு தெரிவித்து கொள்கிறது. மேலும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரமும் செய்ய உள்ளோம். மேலும் வருகிற மே மாதம் 19ம் தேதி நடைபெறும் 4 தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. வேட்பாளர்களுக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் பெருவாரியான வாக்குகளை வாரி வழங்கி வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: