வாக்களித்துவிட்டு வந்து தாயின் இறுதிசடங்கில் பங்கேற்ற தொழிலாளி

கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளி மடிவாளா நகரை சேர்ந்தவர் சி.என்.நாயக்,  தொழிலாளி. வாக்குப்பதிவு நாளான நேற்று அவரின் தாய் விமலா (89) உடல்  நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து இறுதிச் சடங்கு உள்ளிட்ட  பணிகள் நடந்து கொண்டிருந்தன. இந்த பணி ஒருபுறம் நடந்து கொண்டிருந்தபோது நாயக், வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கைப்  பதிவு செய்தார். நாயக் மட்டும் இன்றி அவரின் மனைவி் இந்திராவும்  வாக்கை பதிவு செய்தார். அதன்பிறகு இறுதி சடங்கில் அவர் கலந்து  கொண்டார். தாய் இறந்த போதிலும் வாக்கை பதிவு செய்வதன் மூலம் சிறந்த  குடிமக்கள் என்று சி.என்.நாயக் மற்றும் அவரின் மனைவி இந்திரா ஆகிய இரண்டு  பேரும் நிரூபித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: