அசாமில் மன்மோகன்சிங் வாக்களித்தார்

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் தனது மனைவி குர்சரண் கவுருடன் நேற்று பிற்பகலில் அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி நகருக்கு விமானத்தில் வந்தார். பின்னர் திஸ்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு சென்ற மன்மோகன் சிங், தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் அசாம் முன்னாள் முதல்வர் ஹிதேஸ்வர் சாய்கியா வீட்டுக்கு சென்ற மன்மோகன்சிங் அங்கு சிறிதுநேரம் ஓய்வெடுத்தார். பின்னர் அங்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர் தருண்கோகாய் உள்ளிட்டோரை சந்தித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: