தரக்குறைவாக பேசி வெளியேற்றியதாக சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை போலீசில் புகார்

சென்னை: வேலை செய்ய விடாமல் தரக்குறைவாக பேசி வெளியேற்றிய திரைப்பட இயக்குனர் அட்லி மீது துணை நடிகை கிருஷ்ணா தேவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போரூரை சேர்ந்த துணை நடிகை கிருஷ்ணா தேவி (51) நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

நான் சினிமா துறையில் துணை நடிகையாகவும், டப்பிங் கலைஞராகவும்  பணிபுரிந்து வருகிறேன். நான் கடந்த 16ம் தேதி செம்பரம்பாக்கத்தில் உள்ள இவிபி பிலிம் சிட்டியில், திரைப்பட இயக்குனர் அட்லி எடுக்கும் திரைப்படத்தில் வேலை பார்த்து வந்தேன். நான் வேலை பார்க்கும் போது அட்லியும் அவரது உதவியாளர்கள் சிலரும் என்னை தரக்குறைவான வார்த்தைகளில் பேசி வேலை பார்க்க விடாமல் வெளியே அனுப்பி விட்டனர். எனவே இயக்குனர் அட்லி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: