பொள்ளாச்சி பாலியல் விவகாரம் திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேருக்கு காவல் நீட்டிப்பு

கோவை: பொள்ளாச்சியில் மாணவிகளை பலாத்காரம் செய்து படம் எடுத்து மிரட்டிய வழக்கில், சபரிராஜன்(25) சதீஸ்(28), வசந்தகுமார்(24) திருநாவுக்கரசு(27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 4 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், புகார் கொடுத்த பெண்ணின் சகோதரனை தாக்கிய வழக்கில் கைதான மணிவண்ணன் என்பவரும் பாலியல் வன்கொடுமை வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். கைதான 5 பேருக்கும் நேற்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைந்தது. நேற்று  மாலை இவர்கள், சிஜேஎம் கோர்ட்டில் நீதிபதி நாகராஜ்  முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதில் 5 பேரின் நீதிமன்ற காவலை மே 6ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: