சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய 14 பேர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் கடந்த சில நாட்களுக்கு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழித்து பேசி வாட்சப்பில் வெளியிட்டவர்களை கைது செய்யக்கோரி காவல் நிலையம் முற்றுகை, கல்வீச்சு சம்பவம் நடந்தது. இந்த வழக்கில், சமூக வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட நபரின் படத்துடன் வெளியிட்டு அவர்தான் வீடியோ வெளியிட்டதாக பரவியது. போலீசாரின் விசாரணையில் திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த அய்யாச்சாமி என்பது தெரியவந்தது.

அவரிடம் விசாரித்தபோது, நான் வெளியிடவில்லை. என் பெயரை தவறாக சித்தரித்ததாக கொத்தமங்கலம் குகன், கீரனூரை சேர்ந்த மாரிமுத்து ஆகியோரை குறிப்பிட்டிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் 2 பேரையும் திருச்சிற்றம்பலம் போலீசார் கைது செய்தனர். இதேபோல், அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்திய வழக்கில் பொறையாரை சேர்ந்த 9 பேரும், கடலூர் மாவட்டத்தில் சாதி மோதலை தூண்டும் விதமாக வாட்ஸ்அப்பில் வெளியிட்ட சுந்தரமூர்த்தி (71) உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: