திருவொற்றியூர்: மாதவரம் அடுத்த பால்பண்ணை பகுதியில் உள்ள அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தோட்டக்கலை பயிர் வளர்ப்பு பற்றி அறிந்து கொள்வதற்காக கோடைகால பயிற்சி முகாம் கடந்த 20ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த பயிற்சி முகாம் வருகின்ற மே மாதம் 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது.இந்த முகாமில் தோட்டக்கலை பயிர் வளர்ப்பு பற்றி அறிந்து கொள்ளவும், குறுகிய காலத்தில் பயிற்சி பெற்று தங்கள் திறைமைகளை வெளிக்காட்டிட தோட்டக்கலை துறை தகவல்கள், தோட்டக்கலை பயிர்கள் வளர்ப்பது, வீட்டிலேயே அலங்கார செடிகள் வளர்ப்பது, வீட்டை சுற்றி தோட்டம் அமைத்தல், வீட்டிலேயே காளான் வளர்ப்பது, மாடித்தோட்டம் அமைப்பது மற்றும் சாக்லேட் பொருட்கள் தயாரிப்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகிறது.