தோஹா: கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரின் 2ம் நாளில் இந்திய அணி 2 தங்கம் உட்பட 5 பதக்கங்களை வென்று அசத்தியது.தொடக்க நாளில் 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்த இந்திய அணிக்கு, தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து மகளிர் 800 மீட்டர் ஓட்டத்தில் முதல் தங்கப் பதக்கத்தை வென்று உற்சாகமளித்தார். அவர் 2 நிமிடம், 02.70 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார். இது கோமதியின் சிறப்பான செயல்பாடாகவும் அமைந்தது.
ஆண்கள் குண்டு எறிதல் போட்டியில் களமிறங்கிய இந்திய வீரர் தேஜிந்தர்பால் சிங் தூர், முதல் சுற்றிலேயே 20.22 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார்.