பெ.நா.பாளையம்: கோவையில் அந்தோணியார் கெபி, கல்வீசி உடைக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை பெ.நா.பாளையம் அருகே கண்ணப்பநகர் பகுதியை சேர்ந்தவர் ஜேசுரத்தினம் (38). இவர், தனது வீட்டின் முன் இயேசு, வேளாங்கண்ணி மாதா மற்றும் அந்தோணியார் ஆகியோருக்கு உருவ சிலை செய்து கெபி அமைத்து கண்ணாடி கூண்டில் வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் மர்ம நபர் அந்தோணியார் சிலையை கல்லால் அடித்துள்ளனர். இதில் கண்ணாடி மற்றும் டியூப்லைட் உடைந்தது. சத்தம் கேட்டு ஜேசுரத்தினம் வெளியில் வந்து பார்தபோது கெபியின் கண்ணாடி உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.