×

அந்தோணியார் கெபி கல்வீசி உடைப்பு: கோவையில் பரபரப்பு

பெ.நா.பாளையம்: கோவையில் அந்தோணியார் கெபி, கல்வீசி உடைக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை பெ.நா.பாளையம் அருகே கண்ணப்பநகர் பகுதியை சேர்ந்தவர் ஜேசுரத்தினம் (38). இவர், தனது வீட்டின் முன் இயேசு, வேளாங்கண்ணி மாதா மற்றும் அந்தோணியார் ஆகியோருக்கு உருவ சிலை செய்து கெபி அமைத்து கண்ணாடி கூண்டில் வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் மர்ம நபர் அந்தோணியார் சிலையை கல்லால் அடித்துள்ளனர். இதில் கண்ணாடி மற்றும் டியூப்லைட் உடைந்தது. சத்தம் கேட்டு ஜேசுரத்தினம் வெளியில் வந்து பார்தபோது கெபியின் கண்ணாடி உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கெபி மீது கல்வீசிய மர்மநபரை தேடி வருகிறார்கள். இலங்கையில் சர்ச் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள இந்த நேரத்தில், கோவையில் கெபி மீது கல்வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு இதேபோல இயேசு மற்றும் வேளாங்கண்ணி சிலைகள் உள்ள கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Antonyyar Keeb Kalvacei ,Frost ,Coimbatore , Anthony KP, Coimbatore
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு