சேலம் : சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மாரியம்மன்புதூர் பகுதியில் கோதுமலை வனப்பகுதியில் சிறுத்தை வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மக்கள் பீதி அடைந்து உள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாழப்பாடி வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.