மதுரை : மதுரை காமராஜர் பல்கலைக்கு புதிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரை நியமிக்கக் கோரிய வழக்கில், உயர் கல்வித்துறை முதன்மை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் பல்கலை, துணைவேந்தர், கல்லூரிக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோருக்கு
நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முறைகேடு புகார்கள் உள்ள தற்போதைய தேர்வுக் கட்டுப்பட்டு அதிகாரி ரவியை மாற்றி புதிய அதிகாரியை நியமிக்க கோரி வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.