சூலூர்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள், மழையின் காரணமாக வேலை செய்யவில்லை, சிசிடிவி கேமரா ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார். மேலும் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு 9 பறக்கும் படை குழுக்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். கோவை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, எனவும் வேட்பாளர்கள், பிரதிநிதிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.