சென்னை: சென்னை சென்ட்ரல்- அரக்கோணம்- செங்கல்பட்டு- கடற்கரை சுற்றுவட்டாரப்பாதையில் சர்க்குலர் ரயில் இயக்கம் தொடங்கியது. தினமும் காலை 10.30 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்படும். அரக்கோணம், திருமால்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக மாலை 4.10 மணிக்கு ரயில் கடற்கரை வந்தடையும். மறுமார்க்கமாக கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து காலை 9.50 மணிக்கு ரயில் புறப்படும்.