புதுடெல்லி: ரபேல் ஒப்பந்த தீர்ப்பில் பிரதமர் நரேந்திர மோடியை திருடன் என கூறியதாக குறிப்பிட்டதற்காக உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தார்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, ரபேல் ஒப்பந்தம் தொடர்பான தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் பிரதமர் மோடியை திருடன் என்று கூறியதாக கருத்து தெரிவித்தார். இதற்கு பாஜவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே கடந்த 15ம் தேதி, பாஜ எம்பி மீனாக்ஷி லெகி உச்ச நீதிமன்றத்தில் ராகுல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி வரும் 22ம் தேதிக்குள் இதுகுறித்து ராகுல் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பினார்.