புதுடெல்லி: கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து நேற்று முன்தினம் தோஹா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. பயணிகளின் உடமைகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் (சிஐஎஸ்எப்) சோதனையிட்டனர். அப்போது ஷபின் ஷா என்ற பயணியின் ஷூவை கழற்றும்படி அதிகாரிகள் கேட்டு கொண்டனர். ஷூவை எக்ஸ்ரே ஸ்கிரீனிங் மூலம் பரிசோதனை செய்தபோது, ஒரு கிலோ தடை செய்யப்பட்ட ஹசிஷ் போதைப் பொருள் கடத்தி செல்ல இருந்தது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம்.