கஞ்சா போதையில் ஆட்டோ, பைக்கை உடைத்தவர் கைது

சென்னை: ராயப்பேட்டை சைவ முத்தையா 1வது தெருவை சேர்ந்த வரதராஜ் (54), என்பவர், கடந்த 20ம் தேதி இரவு வீட்டின் முன் தனது ஆட்டோவை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, ஆட்டோ கண்ணாடி மற்றும் அருகில் நிறுத்தப்பட்டிருந்த 3 பைக்குகள் உடைக்கப்பட்டு இருந்தது.

ஐஸ்அவுஸ் போலீசார் விசாரணையில் அதே தெருவை சேர்ந்த நரேஷ் (எ) குபேந்திரன் (19) என்பவர், அளவுக்கு அதிகமாக கஞ்சா அடித்துவிட்டு, போதையில் வாகனங்களை உடைத்தது தெரிந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: