கொழும்புக்கு கடத்த இருந்த 26 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்: 2 பேர் சிக்கினர்

சென்னை: சென்னையில் இருந்து கொழும்புக்கு கடத்த இருந்த 26 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு கரன்சிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் லங்கன் ஏர் லைன்ஸ் விமானம் நேற்று காலை 10.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் பணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தி பயணிகளை அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது திருச்சியை சேர்ந்த முகமது நிசார் (43) என்பவர் சுற்றுலா பயணி விசாவில் இலங்கை செல்ல வந்தார். இவருடைய உடமைகளை சோதனை செய்ததில் ஒன்றும் இல்லை.

மேலும் சந்தேகம் தீராத அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதித்தனர். அவரது உள் ஆடைக்குள் கட்டுக்கட்டாக சவுதி ரியால் வெளிநாட்டு பணம் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.  இதன் சர்வதேச மதிப்பு 15.5 லட்சம். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவருடைய பயணத்தை ரத்து செய்தனர். அவரை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.  இதே விமானத்தில் மதுரையை சேர்ந்த அஜீத்கான் (30) என்பவர் சுற்றுலா பயணியாக இலங்கை செல்ல வந்தார். அவருடைய சூட்கேசை அதிகாரிகள் ஸ்கேன் செய்து பரிசோதித்தனர். சூட்கேசின் கைப்பிடிக்குள் யூரோ கரன்சி சுருட்டி மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். சூட்கேஸ் கைப்பிடி குழாய்க்குள் இருந்த 10.5 லட்சம் மதிப்புடைய யூரோ கரன்சிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். அவரையும் கைது செய்தனர். இரண்டு பேரிடம் இருந்து 26 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து 2 பேரையும் விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: