வேளச்சேரி: வேளச்சேரி, அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் அசோக் (32). தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு பெருங்குடி ரயில் நிலையத்தில், ரயிலை விட்டு இறங்கி, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆட்டோவில் வந்த 3 பேர் அவரை மடக்கினர். பின்னர், அவரை கத்தி முனையில் மிரட்டி பணம், செல்போனை கொடுக்குமாறு கேட்டுள்ளனர். அவர் கொடுக்க மறுத்ததால், கத்தியால் தலையில் வெட்டி, அவரது பர்சில் இருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பிடுங்கிக் கொண்டு தப்பி சென்றனர்.