வாலிபரை கத்தியால் வெட்டி வழிப்பறி

வேளச்சேரி: வேளச்சேரி, அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் அசோக் (32). தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு பெருங்குடி ரயில் நிலையத்தில், ரயிலை விட்டு இறங்கி, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆட்டோவில் வந்த 3 பேர் அவரை மடக்கினர். பின்னர், அவரை கத்தி முனையில் மிரட்டி பணம், செல்போனை   கொடுக்குமாறு கேட்டுள்ளனர். அவர் கொடுக்க மறுத்ததால், கத்தியால் தலையில் வெட்டி, அவரது பர்சில் இருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பிடுங்கிக் கொண்டு  தப்பி சென்றனர்.

சத்தம் கேட்டு ஓடிவந்த   அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பள்ளிக்கரணையில்  உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தலையில் 8 தையல் போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அசோக், வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: