ஓடும் காரில் தீ விபத்து: டிரைவர் தப்பினார்

பல்லாவரம்: விருகம்பாக்கம், பத்மாவதி நகரை சேர்ந்தவர் ஜெகதீஷ் (28). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சமீபத்தில், விடுமுறை காரணமாக ஊருக்கு வந்த ஜெகதீஷ், நேற்று தாம்பரத்தில் தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கிருந்து தனது சொகுசு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பல்லாவரம் மேம்பாலம் அருகே ஜிஎஸ்டி சாலையில் சென்றபோது, காரின் முன் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது.  சுதாரித்துக்கொண்ட ஜெகதீஷ் உடனடியாக, காரை சாலை ஓரம் நிறுத்தி விட்டு இறங்கி ஓடினார்.

சிறிது நேரத்தில் கார் மளமளவெ தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து, தாம்பரம் தீயணைப்பு படையினர், தீயை அணைத்தனர். இதுகுறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. ஓடும் காரில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: