பல்லாவரம்: விருகம்பாக்கம், பத்மாவதி நகரை சேர்ந்தவர் ஜெகதீஷ் (28). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சமீபத்தில், விடுமுறை காரணமாக ஊருக்கு வந்த ஜெகதீஷ், நேற்று தாம்பரத்தில் தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கிருந்து தனது சொகுசு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பல்லாவரம் மேம்பாலம் அருகே ஜிஎஸ்டி சாலையில் சென்றபோது, காரின் முன் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. சுதாரித்துக்கொண்ட ஜெகதீஷ் உடனடியாக, காரை சாலை ஓரம் நிறுத்தி விட்டு இறங்கி ஓடினார்.