டெல்லி: ‘ஒவ்வொரு இந்திய மக்களின் கவுரவம் மற்றும் மரியாதையை நிலைநாட்டும் வகையில், குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் அமைந்துள்ளது’ என, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒட்டுமொத்த உள்ளூர் உற்பத்தியில் குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டத்துக்கு 1.2 சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரை செலவாகும். இந்த திட்டத்தை செயல்படுத்த புதிய வரிகள் போட வேண்டிய அவசியம் இல்லை. இத்திட்டத்தால், ஒவ்வொரு இந்திய மக்களுக்கும் கவுரவமும் மரியாதையும் ஏற்படும். ஏழைகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை அளிக்கும். பழுதாகியிருக்கும் பொருளாதார இயந்திரத்தை, மீண்டும் இயக்க குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் பயன்படும். பொருளாதார நடவடிக்கை அதிகரிப்பதால் வேலை வாய்ப்பும் பெருகும்.