சென்னை: உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஜனநாயகத்தைப் படுகுழியில் தள்ளும் முயற்சிகளை அதிமுகவும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும் உடனடியாகக் கைவிட்டு உள்ளாட்சித் தேர்தல்களை காலதாமதம் இன்றி நடத்திட வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.