தஞ்சையில் சிறுவனை கொலை செய்து புதைத்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

தஞ்சை : தஞ்சையில் சிறுவனை கொலை செய்து புதைத்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தஞ்சை அடுத்த நாஞ்சிகோட்டை சாலை செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்த சிவக்குமாரின் மகன் கிஷோர், கடந்த 23ம் தேதி விளையாட சென்றுள்ளார். ஆனால், நீண்டநேரமாகியும் கிஷோர் வீடு திரும்பாததால் கிஷோரின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் அரவிந்த், சிறுவன் கிஷோரை கொலை செய்தது தெரியவந்தது. அரவிந்த் மது அருந்துவதை பார்த்த கிஷோர், வீட்டில் சொல்லிவிடுவதாக மிரட்டியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கொலை செய்து சடலத்தை புதைத்தது விசாரணையில் அம்பலமானது.

இதைத் தொடர்ந்து, சிறுவன் கிஷோரின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டதோடு, சிறுவனை கொலை செய்த பாலிடெக்னிக் மாணவர் அரவிந்தையும் போலீசார் கைது செய்தனர். மது அருந்துவதைவீட்டில் சொல்லி விடுவேன் என சிறுவன் கூறியதால் அவனை கொலை செய்ததாக அரவிந்த் வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த தஞ்சை முதலாவது கூடுதல் நீதிமன்றம், குற்றவாளி அரவிந்துக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மேலும் ரூ.20,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து அரவிந்த் சிறையில் அடைக்கப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: