சென்னை: வாக்கு இயந்திரம் உள்ள இடத்தில் 24 மணி நேரமும் முகவர்கள் இருக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதுகாரி சத்யபிரதா சாஹூ தகவல் தெரிவித்துள்ளார். மதுரையில் ஆவண அறையில் அதிகாரி நுழைந்தது சர்ச்சையான நிலையில், தேர்தல் அதிகாரி இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும், மாவட்ட அதிகாரி உள்ளிட்ட அனைவருக்கும் மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறை பற்றி தெரிவித்துள்ளோம் எனவும் சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.