மும்பை: இந்திய பங்குச்சந்தைகளில் இன்றைய காலை வர்த்தகத்தின்போது சரிவு காணப்பட்டது. காலை வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்தது. இதேபோல, தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 100 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, உலக அளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் போக்கு, வந்தவரை லாபம் எனக் கருதி பங்குகளை விற்பது அதிகரித்தது போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகளில் சரிவு காணப்படுகிறது.