4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்....... வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக

சென்னை: 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்ப்பிடற தேர்தலோடு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. வழக்கு நிலுவை காரணமாக அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கும், சூலூர் எம்.எல்.ஏ.கனகராஜ் திடீரென காலமானதால் சூலூர் தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து இந்த 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.   

இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இந்நிலையில், 4 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒட்டப்பிடாரம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரராஜ், சூலூர் தொகுதியில் கே.சுகுமார், திருப்பரங்குன்றம் தொகுதியில் ஐ.மகேந்திரன், அரவக்குறிச்சி தொகுதியில் சாகுல் ஹமீது ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: