சென்னை: 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்ப்பிடற தேர்தலோடு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. வழக்கு நிலுவை காரணமாக அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கும், சூலூர் எம்.எல்.ஏ.கனகராஜ் திடீரென காலமானதால் சூலூர் தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து இந்த 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.