சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 260 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. டெல்லி செல்லும் ஜிடி விரைவு ரயிலில் கடத்தி செல்ல முயன்ற செம்மரக்கட்டைகளை ரயில்வே பாதுகாப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். 260 கிலோ செம்மரக்கட்டைகளை கொண்டு செல்ல முயன்ற சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மகேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.